என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாங்குநேரியில் பள்ளி மாணவர் மீது தாக்குதல்: செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கண்டனம்
- படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
- கொலைபாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பெருந்தெருவைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கையையும் பள்ளியில் நடந்த பிரச்சனையால் கடந்த 9-ந்தேதியன்று சக மாணவர்களால் தாக்கியும், மிகக் கொடூரமாக அரிவாளால் வெட்டியும் உள்ளார்கள்.
உடன் படித்த மாணவர்களால் இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டிருப்பது கண்டு மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த கொலைபாதக செயல்களுக்கு என்னுடைய வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவரும், அவரது தங்கையும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். இதுபோன்ற சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்