search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேகர்பாபு கேள்வியும்... எடப்பாடி பதிலும்...
    X

    சேகர்பாபு கேள்வியும்... எடப்பாடி பதிலும்...

    • சேகர்பாபு ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியோடு ஒன்றாக இருந்தவர்தான்.
    • தி.மு.க.வில் இணைந்து இப்போது அமைச்சராக இருக்கிறார்.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் பட வசனத்தை போல 4 நாட்கள் மழை பெய்ததே எங்களை போல் வீதியில் இறங்கி சுற்றினீர்களா? இல்லை நிவாரண பணிகளை செய்தீர்களா? எங்கெங்கு தண்ணீர்கள் தேங்கி இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? எதுவும் செய்யாமல் வீட்டில் இருந்து கொண்டே கேள்வி கேட்பதா என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி எழுப்பி இருக்கிறார். அதாவது சென்னையில் மழை நீர் தேக்கத்திற்கு அரசு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியதற்குத்தான் இப்படி ஒரு கேள்வியை சேகர்பாபு எழுப்பி இருக்கிறார்.

    நாங்கள் வீதி, வீதியாக சென்று எங்கெங்கெல்லாம் தண்ணீர் தேங்கி இருக்கிறதோ அதை வடிய செய்வதற்கு ஏற்பாடு செய்தோம். மக்களுக்கு உதவி செய்தோம். உங்கள் ஆட்சி காலத்தில் நீங்கள் எதுவுமே செய்யாததால்தான் இப்போது இந்த தண்ணீர் தேக்கமும். எங்களுடைய நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என்று கூறினார். சேகர்பாபு ஏற்கனவே அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியோடு ஒன்றாக இருந்தவர்தான். தி.மு.க.வில் இணைந்து இப்போது அமைச்சராக இருக்கிறார். இதை குறிப்பிட்டு தன்னோடு இருந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி சொன்னாராம்.... "இப்போது அவர் கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் போயிருக்கிறார். அதை நாம் கேட்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம். காலம் இனியும் மாறத்தான் செய்யும்" என்றாராம்.

    Next Story
    ×