search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு
    X

    காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறப்பு

    • காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நாளை வகுப்புகள் தொடங்குகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை பல்வேறு கட்டங்களாக விடப்பட்டது. கடந்த 23-ந்தேதி ஒரு சில பள்ளிகளுக்கு விடப்பட்டன.

    27-ந்தேதி முதல் மேலும் சில பள்ளிகள் மூடப்பட்டன. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி விடுமுறையை மையமாக வைத்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன.

    காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.

    தனியார் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நாளை வகுப்புகள் தொடங்குகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×