search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதி தேர்வு அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவடைகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதி தேர்வு அடுத்த மாதம் 12-ந்தேதி முடிவடைகிறது

    • 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுவதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடத்தப்படும். 13-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளன.

    மேலும் ஏப்ரல் 23-ந் தேதி முதல் 26-ந்தேதி வரையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×