என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது சரமாரி தாக்குதல் - வலுக்கும் கண்டனங்கள்
- எனது வாழ்க்கை முடிந்தது, என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேசபிரபு தெரிவித்துள்ளார்.
- சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசபிரபு. இவர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு நேசபிரபு மர்மநபர்கள் சிலர் தன்னை பின் தொடர்வதாக காவல்துறையின் அவசர எண்ணை (100) தொடர்பு கொண்டு காவல்துறை அதிகாரியிடம் பாதுகாப்பு கேட்டுக்கொண்டு இருந்த போதே நேசபிரபுவை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது எனது வாழ்க்கை முடிந்தது, என்னை வெட்டுகிறார்கள் சார் என்று காவல்துறை அதிகாரியிடம் நேசபிரபு தெரிவித்துள்ளார். இதற்கு அந்த காவல்துறை அதிகாரி அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பலத்த காயம் அடைந்த நேசபிரபு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் மீதும், அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர் நலச்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. மேலும் இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நேசபிரபு மர்மநபர்களால் தாக்கப்படும் போது காவல்துறை அதிகாரியிடம் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, செய்தியாளர் நேசபிரபு தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்