search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாக்கில் வைத்ததும் கரைந்து வேலை செய்யும்- ஆண்களின் அந்த ஆசையை தூண்டும் புதிய வகை செக்ஸ் மருந்து
    X

    நாக்கில் வைத்ததும் கரைந்து வேலை செய்யும்- ஆண்களின் அந்த ஆசையை தூண்டும் புதிய வகை செக்ஸ் மருந்து

    • குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்ததும் நம்மால் முடியுமா என்கிற அச்சம் வாலிபர்களை தொற்றிக் கொள்கிறது.
    • புதிய வகை மருந்தை நாக்கில் வைத்தால் போதும் என்றும் அது எளிதில் கரைந்து உடனடியாக வேலைய தொடங்கி விடும் என்றும் கூறுகிறார்கள்.

    இணைய தளங்களில் கொட்டி கிடக்கும் ஆபாச வீடியோக்களுக்கு இன்றைய இளைஞர்கள் பலர் அடிமையாகி கிடக்கிறார்கள். அதுபோன்ற வீடியோக்களில் உள்ள காட்சிகளை பார்த்து விட்டு முயன்று தோற்றுப் போகிறவர்கள் ஏராளம். அது போன்ற நபர்களே மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

    இதனால் நம்மால் எதுவுமே முடியாதோ?... என்கிற மனநிலைக்கு தள்ளப்படும் இளைஞர்களே மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்ததும் மேலும் பதட்டமாகி விடுகிறார்கள் என்கிறார்கள் டாக்டர்கள். இதுபோன்ற வாலிபர்களுக்கு இனிப்பாக இருக்கக் கூடிய முதல் இரவுகள் கூட கசப்பாகவே மாறிப் போய் இருக்கின்றன என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ஒரு காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே திருட்டுத் தனமாக சென்று பார்க்க முடிந்த பலான படங்கள் இன்று செல்போன் வழியாக வீடுகளுக்குள்ளேயே நுழைந்து விட்டன. பரந்து விரிந்து கிடக்கும் வக்கிரமான ஆபாச வீடியோக்களை எப்போது வேண்டுமானாலும் இளைஞர்களால் கண்டு ரசிக்க முடிகிறது.

    இதுவே சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வாலிபர்கள் மத்தியிலும் இதுபோன்ற செக்ஸ் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது என்பதும் மருத்துவ உலகின் எச்சரிக்கையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

    இதனால் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்ததும் நம்மால் முடியுமா? என்கிற அச்சம் வாலிபர்களை தொற்றிக் கொள்கிறது. இதில் இருந்து மீள்வதற்கே அவர்கள் தவறான வழிகளை நாடுகிறார்கள்.

    "ஆண்மை" இல்லாதவன் என கட்டிய மனைவி எண்ணி விடக்கூடாதே என்கிற அச்சத்திலேயே மருந்து, மாத்திரைகளை இளைஞர்கள் பலர் தேடி .... தேடி... சர்பிடுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது என்கிறது மருத்துவ புள்ளி விவரம்.

    இது தொடர்பாக மத்திய சுகாதார துறை ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 'வயாகரா டைப்' மாத்திரைகளையும் மருந்துகளையும் எடுத்துக் கொண்டு செக்ஸ் விஷயத்தில் ஏற்படுத்தி 'வீக்'கான வாலிபர்கள் பலர் அடிமையாகி வீழ்ந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. வாலிப பருவத்தில் ஏற்படும் சில தீய பழக்க வழக்கங்கள் திருமணத்துக்கு பின்னர் தொடர்வதும் அதில் இருந்து மீள முடியாமல் பலர் தவிப்பதுமே வயாகரா போன்ற புதுவிதமான மருந்துகளை மருத்துவ சந்தைக்குள் இழுத்து வருகிறது என்றே கூறலாம். அப்படி புதிதாக வாலிபர்களை வசப்படுத்த வீரியம் மிக்க 'செக்ஸ் மருந்து' ஒன்று வந்துள்ளதாக கிளுகிளுப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கு முன்னர் விற்பனைக்கு வந்துள்ள வயாகரா போன்ற அந்த ஆசையை தூண்டும் மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில் புதிய மருந்தின் விலையோ குறைவு என்றும் ஆனால் நிறைவான சுகத்தை அளிக்கிறது என்கிற கருத்தும் நிலவுகிறது. இது போன்ற மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

    எளிதில் கரையும் தன்மை கொண்ட மருந்தாக இருக்கும் புதிய வகை மருந்தை நாக்கில் வைத்தால் போதும் என்றும் அது எளிதில் கரைந்து உடனடியாக வேலைைய தொடங்கி விடும் என்றும் கூறுகிறார்கள்.

    குறிப்பிட்ட இந்த மருந்தை சாப்பிடுபவர்கள் உடனடியாக செக்சில் ஈடுபட வேண்டும் என்கிற மனநிைலக்கு தள்ளப்பட்டு விடுவதாகவும் அதன் பின்னர் தங்களது தாகம் தணிந்தால் மட்டுமே அவர்களால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கிறார்கள் மருத்துவர்கள்.

    இது தொடர்பாக பாலியல் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ஆண்மை குறைபாடு இருப்பதாக கருதும் இளைஞர்கள் டாக்டர்களை அணுகி உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட பிறகே செக்ஸ் பிரச்சினைகளுக்கு மருந்துகளை சாப்பிட வேண்டும். அவர்களாகவே கூவி கூவி செக்ஸ் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் இருந்தும் அது தொடர்பான வீடியோக்களை பார்த்ததும் மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளப்படும் செக்ஸ் மாத்திரைகளும், மருந்துகளும் நாளடைவில் குறிப்பிட்ட மருந்துகளுக்கு அடிமையாக்கி பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பதே உண்மை.

    இது ஒருவித "செக்ஸ் போதை" போல மாறி விடும் ஆபத்தும் உள்ளது. எனவே இளைஞர்கள் 'செக்ஸ்' விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என்றார்.

    எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள். செக்சுக்கு மட்டும் அது இல்லையா என்ன?

    Next Story
    ×