search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டின் தளம் விழுந்து தாய்-மகன் பலி: வீட்டின் உரிமையாளர் கைது
    X

    வீட்டின் தளம் விழுந்து தாய்-மகன் பலி: வீட்டின் உரிமையாளர் கைது

    • தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் தர்கா வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் ஜாகீர் உசேன் (45). பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சாரம்மா (34). இவர்களுக்கு திருமணமான மகளும், 8-ம் வகுப்பு படிக்கும் முகமது அஸ்தக் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் பெய்த தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை ஜாகீர் உசேனின் வீட்டின் மேல் தள சுவர் இடிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த சாரம்மா, முகமது அஸ்தாக் மீது விழுந்தது. இதில் தாய், மகன் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில் 60 ஆண்டுகள் பழமையான வீட்டினை முறையாக பராமரிக்காமல் மேல் தளத்தில் தண்ணீர் தொடர்ந்து தேங்கியதாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து வீட்டினை முறையாக பராமரிக்காமல் உயிரிழப்புக்கு காரணமான வீட்டின் உரிமையாளரான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் ஏ.ஓ.கே. நகரை சேர்ந்த முகமதுயாசர் (43) என்பவர் மீது 304 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் முகமது யாசரை நிபந்தனை ஜாமீனில் போலீசார் விடுவித்தனர்.

    இந்த பகுதியில் இதேபோல் பழமையான வீடுகள் இருப்பதால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×