என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சருக்கு வழிநெடுக கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு- திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்
    X

    காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சருக்கு வழிநெடுக கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு- திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார்.
    • வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி முதல் 1 கோடியே 6 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் 15-ந் தேதி காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு நேரில் சென்று திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். அவருக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இது குறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் தொடக்க விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஸ்ரீபெரும்புதூர் மணிகூண்டு அருகில் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் பேண்டு வாத்தியம்-மேள தாளம்- அதிர் வேட்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய கழகத்தினர் அனைவரும் திரளாக திரண்டு நின்று, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து பிள்ளை சத்திரம் அருகில் செண்டை மேளம் - பேண்டு வாத்தியம் - அதிர் வேட்டுகள் முழங்க வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    அடுத்து, வாலாஜாபாத் வடக்கு - தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு ஒன்றியம், காஞ்சிபுரம் மாநகரம் ஆகியவற்றின் சார்பில் வழியெங்கும் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    மொத்தத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகரில் இருந்து விழா நடைபெறும் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானம் வரை 40 கி.மீ. தூரத்திற்கு வழி நெடுகிலும் பெரும் கூட்டமாக நின்று வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து - காஞ்சிபுரம் வரை வழியெங்கும் சாலையின் இருமருங்கிலும் கழக கொடி, தோரணங்களும், வரவேற்பு பதாகைகளும், பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அமைத்து, காஞ்சிபுரம் மாநகரில் இதுவரை, இதுபோன்ற கோலகலமான வரவேற்பு ஏற்பாடுகள் நடைபெற்றது இல்லை என்ற அளவிற்கு மிகவும் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விழா நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற 15-ந் தேதி காலை 8.30 மணிக்கெல்லாம் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதனாத்தில் அலைகடலென திரண்டு குவிந்திட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

    Next Story
    ×