search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-கோவை போன்று ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
    X

    சென்னை-கோவை போன்று ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
    • திருமகன் ஈவெரா தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை-கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஈரோடு மாநகராட்சி தரம் உயர்த்தப்படும். மாநகர பகுதிகளில் பழுதடைந்துள்ள ரோடுகள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக சீரமைக்கப்படும்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்படும். திருமகன் ஈவெரா இந்த தொகுதியில் என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

    மகன் விட்டு சென்ற பணியை நிச்சயமாக அவருடைய தந்தை செயல்படுத்தி காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×