என் மலர்

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை நீர்மட்டம் 103.72 அடியாக உயர்வு
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 103.72 அடியாக உயர்வு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 4,176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 2,463 கனஅடியாக சரிந்தது.
    • அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 4 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 3 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 4,176 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 2,463 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.68 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 103.72 அடியாக உயர்ந்தது.

    Next Story
    ×