search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி- மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
    X

    கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் பலி- மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

    • விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.
    • மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    மதுராந்தகம்:

    செய்யூரை அடுத்த சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெருங்கருணை, பேரம்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 14-ந்தேதி ஏராளமானோர் கள்ளச்சாராயம் குடித்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 14 பேர் பலியானார்கள் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மேல் மருவத்தூர் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன சுந்தரம் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்காத மதுராந்தகம் டி.எஸ்.பி. மணிமேகலை தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    அவருக்கு பதிலாக மதுராந்தகம் டி.எஸ்.பியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் சிவசக்தி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×