search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்-  அமைச்சர் தகவல்
    X

    2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும்- அமைச்சர் தகவல்

    • இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
    • இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.


    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×