search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிங்கப்பூர் சென்றார்
    X

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிங்கப்பூர் சென்றார்

    • சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
    • மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது.

    சென்னை:

    புதிதாக பொறுப்பேற்ற தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னையில் இருந்து இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (23-ந்தேதி) வெளிநாடு செல்கிறார். சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.

    இதையொட்டி முதலமைச்சரின் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை கவனிக்க தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    முதலமைச்சருடன் இணைந்து ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பங்கேற்க இருப்பதால் முன் கூட்டியே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×