search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்
    X

    அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சுட்டெரிக்கும்

    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 29-ந்தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 27-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். மேலும், இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×