search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த அரூரை சேர்ந்த 8 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி- கர்நாடாக அரசின் சார்பில் வழங்கப்பட்டது
    X

    பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த அரூரை சேர்ந்த 8 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி- கர்நாடாக அரசின் சார்பில் வழங்கப்பட்டது

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
    • வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    அரூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17பேர் உயிரிழந்தனர்.

    இதில் தரும்புரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பரிதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின், என 7 பேர் மற்றும் நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் நேற்று அம்மாபேட்டை கிராமத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் தாலுக்காவை சேர்ந்த தாசில்தார் கரியநாயக், சித்தராஜ், விஏஓ நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்த நபர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினர்.

    இதில், அரூர் வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×