என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

    • கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • "நம்ம இலக்கு ஈரோடு கிழக்கு" என சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாகவும், உச்சநீதிமன்ற வழக்கு மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, "நம்ம இலக்கு ஈரோடு கிழக்கு" என சமூக வலைதளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×