search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பள்ளியில் சான்றிதழ் பெற முன்னாள் மாணவரிடம் லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர் 
    X

    அரசு பள்ளியில் சான்றிதழ் பெற முன்னாள் மாணவரிடம் லஞ்சம் கேட்ட தலைமை ஆசிரியர் 

    • பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார்.
    • சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அமானி மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தான் படித்த பள்ளியான அமானி மல்லாபுரம் அரசு மேல்நிலைபள்ளிக்கு சென்று தமிழ் வழி கல்வி சான்று கேட்டு தலைமை ஆசிரியர் சசிக்குமாரை அணுகி உள்ளார். அப்போது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் முதலில் பள்ளிக்கு நோட்டுகள், பேப்பர் பண்டல்கள் வாங்கி தருமாறு தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார்.

    அதன் பிறகு நோட்டு, பேப்பர் பண்டல்களை நாங்களே வாங்கி கொள்கிறோம் பணமாக கொடுத்து விடுங்கள் எனக்கூறி 300 ரூபாய் பணத்தை பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் கொடுக்க சொல்லியதை தொடர்ந்து, பணம் கொடுத்துவிட்டு சான்றிதழை வாங்கி வந்துள்ளார. மேலும் கார்த்திக், பணம் கொடுத்ததை தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

    குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தலைமை ஆசிரியர் சசிக்குமார், இது போன்று சான்றிதழ் , மாற்று சான்றிதழ் வாங்க வருபவர்களிடம் கட்டாயபடுத்தி பணம் வாங்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையும், தமிழக அரசும் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவர் கார்த்திக் கோரிக்கை வைத்துள்ளார்.

    Next Story
    ×