என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் சொத்து வரி செலுத்த ஜனவரி 15-ந்தேதி வரை கால அவகாசம்
- மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
- கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் டிசம்பர் மாதத்துக்கான மாதாந்திர கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்பேடி மற்றும் கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கேள்வி நேரத்தின் போது 10 உறுப்பினர்களும், நேரமில்லா நேரத்தில் 14 உறுப்பினர்களும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் 80 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணிகள் துறைக்கு நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யவும், கட்டணங்கள் மாற்றி அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாலையில் வணிக விற்பனையகம் நிகழ்ச்சிகள் ( கமர்ஷியல் ஷாப்பிங் நிகழ்வுகள்) மாநகராட்சியின் சாலை பகுதிகளில் நடத்த கட்டணம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் புதிய நாய் இனக்கட்டுபாடு மையம் அமைக்கப்பட உள்ளது.
கொரோனா, டெங்கு, மலேரியா தடுப்பு பணிகளில் பணிபுரிய ஏதுவாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் நலமிகு சென்னை மற்றும் நட்புமிகு சென்னை என்ற அடிப்படையில் தனியார் நிகழ்வுகள் நடத்திட அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் 10 மண்டலங்களில் 1 லட்சத்து 77 ஆயிரம் தெருவிளக்கு மின் கம்பங்கள் மற்றும் 200 உயர் கோபுர மின் விளக்குகளை பராமரிக்க ஒரு ஆண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
கொசஸ்தலை ஆற்றில் கட்டமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவடையாத காரணத்தினால் அதன் ஒப்பந்த காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
பெருங்குடி குப்பை கிடங்கு பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தும் போது சுற்றுச்சூழல் பூங்கா, சி.என்.ஜி. பூங்கா ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஏற்ப தயார்படுத்த முடிவு செய்யப்பட்டன என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்