என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா தொற்று உயருகிறது
- பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
- மாநகராட்சி ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானின் உருமாறிய எக்ஸ்.பி.பி., பி.ஏ.2 வகை தொற்றுதான் அதிக அளவில் பரவி வருகிறது.
இந்த வகை வைரஸ் வீரியம் குறைவாக இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதே நேரம் டெங்கு, நிமோனியா காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுவதால் தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை உள்ளது.
அதே போல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று அச்சுறுத்தலாக இருக்கும்.
சென்னையில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக 5 மண்டலங்களில் அதிகமாக பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அண்ணாநகர்-10, தேனாம்பேட்டை-14, கோடம்பாக்கம்-13, அடையாறு-18, பெருங்குடி-10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது 5 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். மாநகராட்சி ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
வீட்டு தனிமையில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அந்த பகுதியில் இருப்பவர்களையும் நடமாடுபவர்களையும் கட்டாயம் முக கவசம் அணியும்படி அறிவுறுத்தி வருகிறார்கள்.
தற்போதைய நிலையில் மக்கள் அடர்த்தியான பகுதிகளில்தான் தொற்று அதிகரித்துள்ளது. இந்த பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்