search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    நெல்லை அருகே விடுதி அறையில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    சென்னை பழவேற்காடு பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவரது மகள் கிதோரின் ஸ்மைலா. இவர் நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் டக்கரம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரி விடுதி அறையில் தங்கி தினமும் வகுப்புக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் மாணவி கிதோரின் ஸ்மைலா தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த சக மாணவிகள் மற்றும் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×