என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரையில்  மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மதுரையில் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூட ஆட்சியர் உத்தரவு

    • பாலமேடு, அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும்.
    • மதுரை மாவட்டத்தில் மதுக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

    மதுரை:

    தமிழர்கள் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் தை மாதம் நடைபெறும்.

    மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே வருகிற 15,16,17-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 15, 16, 17 தேதிகளில் மதுக்கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×