என் மலர்
தமிழ்நாடு

14 புதிய துணை மின்நிலையங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- 130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- 373 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
சென்னை:
தமிழ்நாட்டில் ஈரோட்டில் 80 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 230 கி.வோ தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம், திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் சிட்கோ, செம்பரம்பாக்கம் மற்றும் வேலூர் மாவட்டம் மேல்பாடி ஆகிய இடங்களில் 46 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள்.
பல்லாவரம் தொகுதி அனகாபுத்தூர், சென்னை மாவட்டம் மில்லர்ஸ் சாலை, கண்ணம்மா பேட்டை (எம்.ஆர்.சாலை), கார்ப்பரேஷன் காலனி, வடபழனி, தாமோதரன் தெரு, கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் 219 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு 33 கி.வோ துணை மின் நிலையங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம்-விளாகம், திருவள்ளுர் மாவட்டம் பொன்னியம்மன் நகர் மற்றும் வேலூர் மாவட்டம் மடையப்பட்டு ஆகிய இடங்களில் 26 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூன்று 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் 373 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
மேலும் முடிச்சூர், பள்ளிக்கரணை, எழில் நகர், சின்மயா நகர், காடுவெட்டிபாளையம், குறிஞ்சிபாடி, வெள்ளிச்சந்தை, வத்தலகுண்டு, தாமரைப்பாடி, பூனாச்சி, நாகலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், எடுத்தவைநத்தம், தாமல், இருங்காட்டுக்கோட்டை சிப்காட், நடைக்காவு, எஸ். ஆர்.புதூர், சிங்காரப் பேட்டை, போச்சம்பள்ளி, பர்கூர், ஒத்தக் கடை, இலந்தைக் குளம், எல்லிஸ் நகர், மேமாத்தூர், ஊட்டி, தேனூர், ஏ.மேட்டூர், புதுக் கோட்டை சிப்காட், கறம்பக்குடி, பட்டுக் கோட்டை நகரம், மணி மண்டபம், சேதுபாவாசத்திரம், மின்னகர், ஊரணி புரம், ஒக்கநாடு கீழையூர், போடிநாயக்கனூர், அளுந்தூர், சின்னவரிகம், பெரியபாளையம், மாத்தூர், திருமுல்லைவாயல், மாங்கல், வேட்டவலம், வந்தவாசி, இந்திரா நகர், திருப்பூர் கலெக்டர் அலுவலகம், கோட்டமங்கலம், ஸ்ரீ மூலக்கரை, தூத்துக்குடி தானியங்கி, ஓடுகத்தூர், கர்ணம்பட்டு, பேர்ணாம்பட்டு, ஆற்காடு, வளவனூர், ஜி.என்.பட்டி ஆகிய இடங்களில் உள்ள 57 துணை மின் நிலையங்களில் 723 எம்.வி.ஏ அளவிற்கு திறன் அதிகரிக்கும் பொருட்டு 91 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள 57 மின் மாற்றிகளின் திறன் உயர்த்தி, அதன் செயல்பாட்டினை முதல்- அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும், கடலூர் மாவட்டம் நெல்லித்தோப்பு; கரூர் மாவட்டம் ஒத்தக்கடை (தரம் உயர்த்துதல்) தென்னிலை, சின்ன பனையூர், பவித்திரம்; அரியலூர் மாவட்டம் திருமழபாடி, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், திருநாகேஸ்வரம் ஆகிய இடங்களில், 130 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 8 புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.