search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்குன்றம் முதல்-ஜனப்பன் சத்திரம் வரை கொல்கத்தா நெடுஞ்சாலையில் தெருவிளக்கு இல்லாததால் தொடரும் விபத்து
    X

    செங்குன்றம் முதல்-ஜனப்பன் சத்திரம் வரை கொல்கத்தா நெடுஞ்சாலையில் தெருவிளக்கு இல்லாததால் தொடரும் விபத்து

    • சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
    • சர்வீஸ் சாலையிலும் மின்விளக்குகள் இல்லை என்று குற்றம் சாட்டினர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தில் இருந்து ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலை வரை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோ மீட்டருக்கு சாலையின் ஓரங்களில் தெரு மின்விளக்குகள் உள்ளன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த தெருவிளக்குகள் எரியாமல் தேசிய நெடுஞ்சாலை இருட்டாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடந்து வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    மேலும் அப்பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மின்விளக்குள் எரியாமல் உள்ளதால் வாகன விபத்துக்கள் அதிகரித்து உள்ளதாக கனரக வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே செங்குன்றம் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட வாகன ஓட்டிகள், பொது மக்கள் கூறும்போது, மின்விளக்குகள் எரியாததால் நல்லூர் டோல்கேட் அருகில் தினமும் விபத்து ஏற்படுவதாகவும், சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைப்பதால், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் சர்வீஸ் சாலையிலும் மின்விளக்குகள் இல்லை என்று குற்றம் சாட்டினர்.இதில் ஊராட்சி தலைவர்கள், ஜெகநாதபுரம் மணிகண்டன், ஆத்தூர் சற்குணம், புதிய எருமை வெட்டிபாளையம் கோதண்டம், பழைய எருமை வெட்டிபாளையம் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, இரண்டு வாரங்களில் நெடுஞ்சாலை துறை, டோல்கேட் நிர்வாகம், போலீசாருடன் இணைந்து அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×