search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களைத்தேடி மருத்துவம்: ஒரு கோடியே 1வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    மக்களைத்தேடி மருத்துவம்: ஒரு கோடியே 1வது பயனாளிக்கு மருந்து பெட்டகம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி என்ற 60 வயது பெண்மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
    • பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இயன்முறை சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் துரையையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 ஆகஸ்டு 5ம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தார்.

    பயனாளியின் வீடு தேடி சென்று அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை தரும் இந்த திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகத்துக்கு முன்னோடி திட்டமாக விளங்கி வருகிறது.

    இந்தத் திட்டத்தினை முதலமைச்சர் சாமண பள்ளியில் தொடங்கி வைத்தபோது ஒரு கோடியாவது பயனாளியை விரைவில் கண்டறியும் வகையில் திட்டத்தின் செயல்பாடு இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார்.

    தற்போது இந்த திட்டம் ஓராண்டில் ஒரு கோடியாவது பயனாளியை திருச்சி மாவட்டம் சன்னாசிப்பட்டியில் கண்டறியும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

    அதன் பின்னர் 50 லட்சமாவது பயனாளிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சித்தலப்பாக்கம் ஊராட்சியில் ஒரு பெண்ணுக்கு நேரில் வழங்கினார். அதன் பின்னர் 60 லட்சமாவது பயனாளிக்கு மதுரையிலும், 75 லட்சமாவது பயனாளி நாமக்கல் மாவட்டம் போதமலையில் உள்ள மலைவாழ் பெண் நல்லம்மாளுக்கும் தரப்பட்டது.

    அதன் பின்னர் 80 லட்சமாவது பயனாளி சென்னையில் கோதாமேடு பகுதியிலும் 90 லட்சமாவது பயனாளி விருகம்பாக்கத்திலும் கண்டறியப்பட்டு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றைய தினம் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளியான திருச்சி அருகே உள்ள சன்னாசிப்பட்டி ஊராட்சி மேல தெருவில் வசிக்கும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனாட்சி என்ற 60 வயது பெண்மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருந்து பெட்டகத்தை வழங்கினார்.

    அதுமட்டுமல்லாமல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இயன்முறை சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் துரையையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

    Next Story
    ×