search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெளுத்து வாங்கும் கனமழை... அப்டேட்ஸ்...
    X

    வெளுத்து வாங்கும் கனமழை... அப்டேட்ஸ்...

    • மழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு 1913 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.
    • மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை:

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    * மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் யானைக்கவுனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    * சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    * மழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு 1913 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 044-25619204, 044-25619206, 044-25619207 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

    * சென்னைப் பெருநகர பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044- 45674567 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1916 ஆகிய எண்களை கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    * சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், மயிலாப்பூர் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    * மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை கோடம்பாக்கம் அருகே ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கினாலும் போக்குவரத்து வழக்கும்போல் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    * கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×