search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய விவகாரம்- பா.ஜனதா ஆர்ப்பாட்டம்
    X

    கள்ளச்சாராய விவகாரம்- பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

    • சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.

    சென்னை:

    கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் பாரதிய ஜனதா மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் கரு.நாகராஜன், சிறுபான்மையினர் அணியை சேர்ந்த தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான எம்.கே.கிளாரன்ஸ், வி.பி.துரைசாமி, செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் டால்பின் ஸ்ரீதர், நடிகை நமீதா, முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரி தேவி, மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், சாய் சத்யன், தனசேகர் மற்றும் மாநில மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×