search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாடிக்கையாளர்களே உஷார்- இம்மாதம் 3 நாட்கள் மூடப்படும் வங்கிகள்
    X

    வாடிக்கையாளர்களே உஷார்- இம்மாதம் 3 நாட்கள் மூடப்படும் வங்கிகள்

    • அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
    • வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும்.

    சென்னை:

    அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 27-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும். மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் 25-ந் தேதி மற்றும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை நாட்களாகும்.

    அதனால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். வங்கி பணிகள் பாதிக்கக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×