என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை- வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்
ByMaalaimalar25 Aug 2023 5:34 AM GMT
- காட்டுயானை உணவு தேவைக்காக விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கமான நிகழ்வு.
- வனத்துறையினர் அந்த காட்டுயானையை சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று பங்களாப்புதூர் அருகே உள்ள எருமைக்குட்டை- அண்ணாநகர் பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது கரும்பு விவசாய நிலத்திற்குள் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் புகுந்தது.
அப்பகுதியில் விவசாயிகள் சிலர் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை உணவு தேவைக்காக விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து வாழை, கரும்பு பயிர்களை சாப்பிட்டு செல்வது வழக்கமான நிகழ்வு.
இந்த நிலையில் யானை விவசாய நிலத்திற்குள் நுழைந்ததும் ஏற்கனவே ரோந்து பணியில் இருந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் அந்த காட்டு யானையை சத்தமிட்டு வனப்பகுதிக்குள் விரட்டி அனுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X