search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்2 தேர்வு முடிவு: மாணவ-மாணவிகளின் செல்போனுக்கு அனுப்ப ஏற்பாடு
    X

    கோப்பு படம்

    எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ்2 தேர்வு முடிவு: மாணவ-மாணவிகளின் செல்போனுக்கு அனுப்ப ஏற்பாடு

      சென்னை:

      எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளையும், நண்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் வெளியிடுகிறார்.

      பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனர்.

      மாணவ-மாணவிகளின் மதிப்பெண்களையும் உடனே தெரிந்து கொள்ளலாம் என்றும் தேர்வு துறை அறிவித்துள்ளது.

      www.dge.tn.gov.in

      www.dgel.tn.gov.in

      www.dge2.tn.gov.in

      www.tnresults.nic.in

      ஆகிய தேர்வத்துறை, இணைய தளங்களில் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

      அதே சமயத்தில் மாணவ-மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகளை செல்போனுக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      Next Story
      ×