search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பஞ்செட்டியில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பஞ்செட்டியில் தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

    • வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர்.
    • 2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் சோதனை.

    பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் பயன்படுத்தும் போனுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பி இருந்தார். அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர், இது குறித்து பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவள்ளூரில் இருந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை நடத்தினர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களையும் சோதனை செய்து வெளியே நிறுத்தப்பட்டன.

    வெடிகுண்டு சோதனையில் பள்ளி வளாகம் நேற்று காலை பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில், அதே பள்ளியில் நேற்றிரவு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் இன்று 2வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

    2-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மோப்பநாய் உதவியுடன் வெடுகுண்டு நிபுணர்கள் பள்ளியில் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×