என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மெட்ரோவில் 2022-ல் 6.09 கோடி பேர் பயணம்
- மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 2015-ம் ஆண்டில் இருந்து 2022 வரை 15.88 கோடி பேர் பயணித்துள்ளனர்.
- 2021-ம் ஆண்டு 3.56 கோடி பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை :
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2015- ஆம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. மெட்ரோவின் முதல் கட்ட சேவை ஆலந்தூர், சென்னை கோயம்பேடு இடையே தொடங்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதை அடுத்து ரெயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. விமானநிலையம் முதல் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில் 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2022-ம் ஆண்டு 6.09 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக 2021-ம் ஆண்டு 3.56 கோடி பேர் அதிகமாக பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட 2015-ம் ஆண்டில் இருந்து 2022 வரை 15.88 கோடி பேர் பயணித்துள்ளனர்.






