search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புழல் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு
    X

    புழல் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு

    • 21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது.
    • புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் டிச.2, 3 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

    இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.42 அடி வரை நீர் மட்டம் உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 570 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    உயரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

    இதனிடையே செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 1000 கன அடியில் இருந்து 1500 கன அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 1100 கன அடியாக உள்ளது.

    Next Story
    ×