என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை: முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் ரத்து- பயணிகள் அவதி
- நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
- முறையான முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னையில் முன்னறிவிப்பின்றி 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னையில் இருந்து டெல்லி, சீரடி, ஐதராபாத்துக்கு இயக்கப்படும் 12 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 6 புறப்பாடு விமானங்கள், 6 வருகை விமானங்கள் ரத்தாகி உள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. முறையான முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
Next Story






