search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்வைத்து ரம்மி விளையாடிய 10 பேர் கைது
    X

    சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் பணம்வைத்து ரம்மி விளையாடிய 10 பேர் கைது

    • பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.
    • பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர்.


    பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் சிலர் ரெயில் பெட்டியில் நடந்து செல்லும் வழியில் கும்பலாக அமர்ந்து பணம்வைத்து ரம்மி விளையாடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து திரிசூலம் ரெயில் நிலையத்திற்கு வந்ததும் ரெயில் நிறுத்தப்பட்டது. பரங்கிமலை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி பயணிகளுக்கு இடையூறாக அமர்ந்து பணம் வைத்து ரம்மி விளையாடிய 10 பேரை கைது செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×