search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு
    X

    தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- தமிழக அரசு உத்தரவு

    • காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையக ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி காவல் ஆணையர் சத்யப்பிரியா, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்.

    காஞ்சிபுரம் டிஜஜி பகலவன், திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய ராஜீவ் குமார், சென்னை காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி காவல் ஆணையராக காமினி, மதுரை காவல் ஆணையராக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×