search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்மோனியா வாயுக்கசிவு- தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு
    X

    அம்மோனியா வாயுக்கசிவு- தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு

    • ரூ.5.92 கோடியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உத்தரவு.
    • தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும்.

    அம்மோனியா வாயுக்கசிவு விவகாரத்தில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி," மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை உடனடியாக செலுத்த வேண்டும்.

    ரூ.5.92 கோடியை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மாசு கட்டுபாடு வாரியம் நிபந்தனைகளை செயல்படுத்தாக தொழிற்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலுக்கு அடியில் புதிய குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். குழாய்க்கு அருகில் அம்மோனியா சென்சார்கள் அமைக்க வேண்டும்.

    மிச்சாங் புயல் காரணமாக கடலுக்குள் குழாயில் சேதம் ஏற்பட்டு அம்மோனியா கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

    தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும்.

    அரசின் தொழில்நுட்பக் குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×