search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை- கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு
    X

    தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத்தொகை- கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு

    • விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.
    • ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கம்பாக்கம், முள்ளி கொளத்தூர், ஈகை ஊராட்சிகளில் தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    விண்ணப்பதாரர்களிடம் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புக், ஆகியவற்றை பெற்று சோதனை செய்தார்.

    மேலும் குடும்ப ஆண்டு வருமானம் எவ்வளவு? சொந்த நிலம் இருக்கிறதா? என்ன வேலை செய்கிறீர்கள்? குடும்பத்தில் உள்ள நபர்கள் எத்தனை பேர்? எந்தெந்த பணியில் உள்ளனர்? அரசு பணியில் உள்ளனரா? சொந்தமாக கார், டிராக்டர் உள்ளிட்ட ஏதேனும் வாகனங்கள் உள்ளதா? என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கம்பாக்கம் ஊராட்சி தலைவர் வேண்டாமிர்தம் ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டன.

    Next Story
    ×