search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
    X

    நெல்லையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை

    • சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எட்டு ராஜன். இவரது மகன் சீனு (வயது 19).

    இவர் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேல திடியூரில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் படித்து வந்தார். இதற்காக அங்கு உள்ள கல்லூரி விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது அறையில் விஷம் குடித்து சீனு மயங்கி கிடந்தார். சக மாணவர்கள் இதனை பார்த்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக கல்லூரி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு பாளை முருகன் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சீனு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×