search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்க கடலில் சூறை காற்று: 10 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
    X

    வங்க கடலில் சூறை காற்று: 10 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் சூறை காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் 2-வது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர்.

    வங்க கடலில் சூறை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுருத்திய நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம். ராமேசுவரம், ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மீன்துறை அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக பகுதியில் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் 2-வது நாளாக பலத்தை சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவது டன் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷ மாக சீறி எழுந்து வருகின்றது.

    இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×