search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு- தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் தாமதம்
    X

    விழுப்புரத்தில் சிக்னல் கோளாறு- தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் தாமதம்

    • விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
    • 5 விரைவு ரெயில்களும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு சென்றுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் ரெயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இந்த வழியாக ஏராளமான ரெயில்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருகிறது.

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லக்கூடிய பொதிகை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரி விரைவு ரயில், அனந்தபுரி, ஆகிய 5 விரைவு ரெயில்களும் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக சென்னைக்கு சென்றுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

    Next Story
    ×