search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாடு ஒரே தேர்தலால் எந்த பயனும் இல்லை: சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒரே நாடு ஒரே தேர்தலால் எந்த பயனும் இல்லை: சீமான்

    • தி.மு.க.வின் ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன்.
    • நடிகை விஜயலட்சுமி 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமற்றது. அதனால் எந்த பயனும் இல்லை. இது ஒரே நாடா?. உணவு , பழக்கவழக்கம், கலாச்சாரம் மாறுபடும்போது எப்படி தேசத்தை ஒன்றாக்க முடியும். தேர்தல் செலவை மிச்சப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். ஒவ்வொரு இடைத்தேர்தல் வரும் போதும் பொதுவான தேர்தல் நடத்தப்படுமா?.

    ஓட்டுக்கு காசு கொடுப்பதை நிறுத்தினால் போதும் தேர்தல் செலவு குறையும். முதலில் காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள். பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பார்க்கலாம்.

    தி.மு.க.வின் ஊழல் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டதை வரவேற்கிறேன். அ.தி.மு.க. சொத்து பட்டியலையும் வெளியிடுங்கள். கர்நாடகா ஊழல் குறித்தும் வெளியிடுங்கள். கர்நாடகாவில் தானே அவர் காவல் துறையில் பணியாற்றினார். அங்கேயே பா.ஜ.க., தலைவராக வேண்டியது தானே. கர்நாடகாவில் அவர் சிங்கம். இங்கே அசிங்கம்.

    உயர்நீதிமன்றம் உண்மையை பேசி உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. தன்னாட்சி அமைப்புக்கள் என நாம் நம்பி வருகிறோம். அது நமது அறியாமை.

    காமராஜர் கொண்டு வந்த திட்டம் மதிய உணவு திட்டம். 50 ஆண்டு மாறி மாறி ஆட்சி செய்து இப்போது தான் பிள்ளைகள் பட்டினி தெரிகிறதா?. திருடனுக்கு திருடன் பாதுகாப்பு. அதனால் தான் நம்மை ஒதுக்க முயல்கின்றனர். நடிகை விஜயலட்சுமி 11 வருடமாக ஒரே குற்றச்சாட்டை கூறி வருகிறார். அதற்காக பயப்படும் ஆள் நான் இல்லை. தேர்தல் வருவதால் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×