search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அப்பா போயிட்டு வாரேன்... தந்தையின் குடிப்பழக்கத்தால் உயிர்விட்ட மகள் உருக்கமான கடிதம்
    X

    அப்பா போயிட்டு வாரேன்... தந்தையின் குடிப்பழக்கத்தால் உயிர்விட்ட மகள் உருக்கமான கடிதம்

    • விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார்.
    • என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சின்ன ராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டதால் மனைவி, பிள்ளைகள் அனைவரும் நிம்மதி இல்லாமல் தவித்துள்ளார்கள்.

    இதனால் வேதனை அடைந்த மகள் விஷ்ணு பிரியா (16) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணு பிரியா 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண் பெற்றிருந்தார். அடுத்து மேல்நிலைப்பள்ளி படிப்புக்கு தயாராகி வந்த நிலையில் தந்தையின் குடிப்பழக்கத்தால் இப்படி ஒரு துயர முடிவை எடுத்துள்ளார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    "என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். நன்றி. எனது குடும்பம் நல்ல குடும்பம். அப்பா, போய் வருகிறேன்... என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    Next Story
    ×