search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனம் விவகாரம்: கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. சுவரொட்டி யுத்தம்
    X

    சாமியாருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் ஒட்டியுள்ள சுவரொட்டி - சனாதனம் எங்கள் உயிர்மூச்சு என பா.ஜனதாவினர் ஒட்டியுள்ள சுவரொட்டி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சனாதனம் விவகாரம்: கோவையில் தி.மு.க.-பா.ஜ.க. சுவரொட்டி யுத்தம்

    • சாமியாரின் மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது பற்றி பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரது தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அளிப்பதாக மிரட்டல் விடுத்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலைவெறியை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்துள்ள சாமியார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் போட்டி போட்டு சுவரொட்டிகளை ஒட்டி உள்ளனர்.

    தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் "போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்" என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    பா.ஜ.க. சார்பில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டியில் "சனாதனம் எங்கள் உயிர் மூச்சு" என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.

    கோவை மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போட்டி போட்டு ஒட்டப்பட்டு உள்ள இந்த சுவரொட்டிகளை பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர். இதனால் கோவை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×