என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
பெரியபாளையம் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பி திருட்டு- 5 பேர் கைது
Byமாலை மலர்8 March 2023 6:17 AM GMT
- மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது.
- இரும்பு கம்பி திருட்டு தொடர்பாக பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரனை கிராமத்தில் இரும்பு கம்பி தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கிருந்த சுமார் 30 டன் எடை கொண்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மாத்தூரைச் சேர்ந்த வாசுதேவன், செங்குன்றம் ஆட்டதாங்கலை சேர்ந்த ரவி, அவரது சகோதரர் பழனி, செங்குன்றத்தைச் சேர்ந்த நாசர், தென்காசியை சேர்ந்த மாயாண்டி ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதேபோல் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடியதாக மீஞ்சூரை அடுத்த புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், அன்பு குமார் ஆகிய 2 பேரை காட்டூர் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X