என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையை சுற்றிப்பார்க்க வந்த 3 மங்களூரு மாணவிகள் மீட்பு
- சிறுமிகளை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
- விடுதி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் நண்பர்களான 3 பேரும் பஸ் மூலம் புறப்பட்டு கோயம்பேடு வந்தது தெரியவந்தது.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் 3 சிறுமிகள் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர்.
இதை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் ஆகியோர் விரைந்து வந்து சிறுமிகளை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் என்பது தெரிந்தது.
அவர்கள் விடுதி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் நண்பர்களான 3 பேரும் பஸ் மூலம் புறப்பட்டு கோயம்பேடு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிகள் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இது பள்ளி மங்களூருவில் உள்ள பள்ளி விடுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்