என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரேசன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது: டிரைவர் தப்பி ஓட்டம்
    X

    ரேசன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது: டிரைவர் தப்பி ஓட்டம்

    • திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
    • வேனில் 5 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்ன ஒபுளாபுரம் கிராமம் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வேனில் 5 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதற்கிடையே காயமடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் ரேசன் அரிசியுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×