search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமண ஆசைகாட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
    X

    சிறை தண்டனை விதிக்க ப்பட்ட சூர்யா. 

    திருமண ஆசைகாட்டி சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

    • சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர்:

    திருச்சி மாவட்டம் மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சூர்யா ( வயது 21). இவர் இன்ஸ்டா கிராம் மூலம் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். இதில் இருவரும் முதலில் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அந்த மாணவியை சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருச்சிக்கு வரும்படி அழைத்துள்ளார். கடந்த 13.9.2021ம் ஆண்டு மாணவி வீட்டிற்கு தெரியாமல் திருச்சி சென்றுள்ளார். திருச்சி பஸ் நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்த சூர்யா மாணவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியுள்ளார் . மாணவியின் பெற்றோர் மூலனூர் மகளிர் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்நிலையில் வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலு தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்டுள்ள சூர்யாவிற்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×