search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பற்கள் பிடுங்கிய விவகாரம்: நெல்லை கோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட 4 போலீசார் ஆஜராகவில்லை
    X

    பற்கள் பிடுங்கிய விவகாரம்: நெல்லை கோர்ட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி உள்பட 4 போலீசார் ஆஜராகவில்லை

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.
    • இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு வந்த சிலரின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக அப்போதைய உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார். மேலும் அவர் மீதும் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உட்பட 14 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான விசாரணை நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் அதில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் உள்பட 14 போலீசாரும் ஆஜராகினர்.

    அதனைத் தொடர்ந்து இதுவரை 7 கட்டங்களாக வாய்தா போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 8-வது முறையாக குற்றம் சாட்டப்பட்ட பல்வீர்சிங் மற்றும் போலீசார் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று காலை நெல்லை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு-1 நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் முதல் நிலை காவலர் ஒருவர் ஆகிய 4 பேர் தவிர மீதம் உள்ள 10 போலீசாரும் ஆஜராகினர். அதனை தொடர்ந்து நீதிபதி திரிவேணி இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×