search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு
    X

    சேலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் தவிப்பு

    • இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது.
    • கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து நேற்று உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் 102.2 டிகிரியாக இருந்த வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்து 103.3 டிகிரியாக பதிவானது.

    இதனால் காலையில் தொடங்கிய வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரித்தது. மேலும் 7 மணி வரை அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சாலைகளில் சென்றவர்கள் குடைகள் பிடித்தபடியும், துணிகளால் தலையை மூடியபடியும் சென்றனர். நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் இரவிலும் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளான நுங்கு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி, கம்பங்கூழ், மோர் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். குளிர்பானங்களை பருகி உஷ்ணத்தை தவிர்த்தனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதியது. இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால் அதிக அளவில் தர்பூசணிகளை வாங்கி சாப்பிட்டனர்.

    இன்று மேலும் 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும், மோர், இளநீர், உப்பு கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஆகியவற்றை அதிக அளவில் பருகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×