என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு
- பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 2 ஆயிரம் கனஅடி வெளியேறி வருகிறது.
- பூண்டி ஏரியின் மொத்த உயரம் 34 அடி. இதில் 34.10 அடிக்கு தண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
தொடர்மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து ஏரியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே இன்று காலை பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 2 ஆயிரம் கனஅடி வெளியேறி வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 34 அடி. இதில் 34.10 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 4,300 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 2,854 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
Next Story






